/* */

மணல் லாரியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்

பூவந்தி அருகே மணல் லாரிகள் சென்று வருவதால், கண்மாய் நீர்வரத்து கால்வாயில் மண் சரிந்து நீர் வரத்து இல்லாமல் போனது.

HIGHLIGHTS

மணல் லாரியை தடுத்து நிறுத்தி  கிராம மக்கள் போராட்டம்
X

லாரிகள் செல்வதால் மண் சரிந்து காணப்படும் நீர்வரத்து கால்வாய்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தியிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது அங்கிருந்து தினமும் 10 லாரிகளுக்கு மேல் மணல் ஏற்றிக்கொண்டு சிவகங்கை பூவந்தி சாலையில் வந்து திரும்பிச் செல்லும்

அந்த ரோட்டிற்கு வருவதற்கு முன்பு குவாரியில் இருந்து வரும் வழியில் ஏனாதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது . லாரிகள் சென்று வருவதால் அந்த கால்வாயில் மணல் சரிந்து நீர் வரத்து இல்லாமல் போனது.

அதனால் ஏனாதியைச் சுற்றி உள்ள கிராம மக்கள் அனைவரும் அந்த வழியாக வரும் மணல் லாரிகள் அனைத்தையும் மறைத்து மறியல் செய்தனர், அதன்பின்பு குவாரி நடத்தும் நபர்கள் வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த கால்வாயை தூர்வாரி கொடுத்துவிடுவோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது

Updated On: 28 Nov 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  7. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  9. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை