/* */

திதி, தர்ப்பணத்துக்கு தடை; வைகை ஆற்றில் பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார்

வைகை ஆற்றுக்குள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பாெதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

HIGHLIGHTS

திதி, தர்ப்பணத்துக்கு தடை; வைகை ஆற்றில் பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார்
X

வைகை ஆற்றுக்கு செல்வோரை தடுப்பு அமைத்து திருப்பி அனுப்பும் போலீசார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க மதுரை, சிவகங்கை விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆடி அமாவாசைக்கு இங்கு வருவார்கள். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வைகை ஆற்றில் நீராடி புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

ஆனால் ‌தொடர்ந்து இரண்டு வருடமாக கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் நிகழ்வு நடைபெறவில்லை. இதனால், திதி, தர்ப்பணம் செய்யும் புரோகிதர்கள் யாரும் வைகை ஆற்றிற்கு வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இருப்பினும் ஒருசில பக்தர்கள் வைகை ஆற்றில் குளித்து விட்டு கோவில் வாசலில் விளக்கு ஏற்றி புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு சென்றனர். போலீசார் வைகை ஆற்றிற்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் கூட்டம் இல்லாததால் திருப்புவனம் வைகையாறு வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On: 8 Aug 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்