மானாமதுரையில் எல்லைசுவாமிக்கு கொட்டும் மழையில் மண் சட்டியில் கறிச்சோறு ஊர்வலம்

மானாமதுரையில் எல்லைசுவாமிக்கு  கொட்டும் மழையில் மண் சட்டியில் கறிச்சோறு  ஊர்வலம்
மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் மானாமதுரை எல்லைபிடாரியம்மன் கோயிலில் கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் படையலிட்டனர்

மானாமதுரையில் எல்லை சுவாமிக்கு கொட்டும் மழையில் மண் சட்டிகளில் கறிச்சோறு எடுத்து ஊர்வலமாக எடுத்துச்சென்று படையல் செய்து வழிபட்டனர்.

மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள எல்லைபிடாரியம்மன் கோயிலில் கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் கறிச்சோறு மற்றும் அசைவ விருந்து படையல் வைத்து வழிபட்டனர். மானாமதுரை அண்ணா சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. புரட்டாசியில் செவ்வாய் சாற்றுதல் விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோன கட்டுபடுகளால் விழா கொண்டவில்லை.



இந்தாண்டில், விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர். புது மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டையுடன் கறிச்சோறு ,நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து மண்சட்டியில் வைத்து கொட்டும் மழையில் தீப்பந்த விளக்கு ஏற்றி, அந்த விளக்கு அணையாமல் இருக்க குடை பிடித்து கிராம மக்கள், மானாமதுரை பழைய பஸ் நிலையப் பகுதியிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். கோயில் எல்லை தெய்வமான எல்லைபிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்களும், ஆராதனைகளும் நடத்தினார். கிருஷ்ணராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story