கீழடி அகழாய்வில் பாசிமணி, யானை தந்த செவ்வக வடிவ பகடை கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் பாசிமணி, யானை தந்த செவ்வக வடிவ பகடை கண்டெடுப்பு
X

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பாசி மணிகள்.

சிவகங்கை மாவட்டம் கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் பாசிமணி, யானை தந்த செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வில் 4 பாசி மணிகள், யானை தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டன.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடந்த 7 கட்ட அகழாய்வுகள் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பிப்.11-ம் தேதி 8-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


இந்நிலையில் நேற்று ஒரு குழியில் 2 அடி தோண்டிய நிலையில் 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் 2 பச்சை நிறத்திலும் 2 ஊதா நிறத்திலும் இருந்தன. மேலும் யானை தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டது. இந்த அகழாய்வில் அதிகளவில் தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி