/* */

அடையாளம் தெரியாத கார் மோதி ஓட்ட பயிற்சி மேற்கொண்ட இளைஞர் பலி

மானாமதுரை அருகே ஒட்ட பயிற்சி மேற்கொண்ட இளைஞர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி பலி. குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம்

HIGHLIGHTS

அடையாளம் தெரியாத கார் மோதி ஓட்ட பயிற்சி மேற்கொண்ட இளைஞர் பலி
X

விபத்தில் பலியான இளைஞர் விக்னேஷ்

மானாமதுரை அருகே உடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் விக்னேஸ்வரன் ( 20 ). இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ராஜகம்பீரம் அருகே விக்னேஸ்வரன் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .

இந்த விபத்தில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மானாமதுரை நகர் காவல்துறையினர் இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் அதன் ஓட்டுநரை தேடி வரும் நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டது.

உடற்கூறு முடிவுற்ற நிலையில் தப்பியோடிய குற்றவாளியை கைது செய்யக்கோரி, விக்னேஷ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த டிஎஸ்பி சுந்தர மாணிக்கம் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.

Updated On: 25 Aug 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்