பயிர்காப்பீட்டுத்தொகையை முறையாக வழங்காததை கண்டித்து ஒன்றியக்குழுவில் தீர்மானம்

பயிர்காப்பீட்டுத்தொகையை முறையாக வழங்காததை கண்டித்து  ஒன்றியக்குழுவில்  தீர்மானம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் இன்று நடந்தது. 

விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தொகையை முறையாக வழங்காததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தேவகோட்டை ஒன்றியத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் இன்று மாதாந்திர ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் பேசுகையில், பிரதம மந்திரியின் நிதியில் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ. 28 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும், ஒன்றிய பொது நிதியில் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் 42 கிராமத்திற்கு பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் கவுன்சிலர் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் ,தேவகோட்டை ஒன்றியத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தொகையை முறையாக வழங்காததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஒன்றிய கவுன்சிலர் ரவி பேசுகையில், ஒவ்வொரு மாதமும் ஊராட்சியில் செலவினங்கள் அதிகரித்து வருவதாகவும், தேவையற்ற செலவுகள் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுப்பினார்.அதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய பெருந்தலைவர் அலுவலகத்தில் செலவினங்கள் முறையாக நடப்பதாகவும்,தேவையற்ற செலவினம் என்பதை ஒன்றிய கவுன்சிலர் கூறினால் குறைத்துக் கொள்வதாக பதிலளித்தார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் செந்தில்நாதன், ஒன்றிய துணைத்தலைவர் ராசாத்தி நடராஜன்,ஆணையாளர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story