/* */

விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் ஆர்வமுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பு

இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்

HIGHLIGHTS

விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் ஆர்வமுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பு
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு மழலை குழந்தைகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் பள்ளியில் சேர்த்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி நாளான இன்று பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்தனர். குழதைகளுக்கு ஆசிரியர்கள் நெல்மணியில் "ஓம் " என்ற எழுத்தையும் "அ "என்ற எழுத்தையும் எழுதவைத்தனர். மகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றனர் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதற்கு முந்தைய நாளான நவமியில் சரசுவதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்குப் பூசை நடத்தி விஜயதசமி அன்று தங்கள் குழந்தைகளை முதல்முறையாக பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்க்கின்றனர்.

Updated On: 15 Oct 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு