காரைக்குடி அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்து ஒருவர் பலி

காரைக்குடி அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்து ஒருவர் பலி

காரைக்குடி அருகே நடந்த சாலை விபத்து

காரைக்குடி அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர் நோன்பு திடல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். (40) மர வியாபாரி.இவரும் ,இவரது நண்பர் மூர்த்தி என்பவரும், காரைக்குடியிலிருந்து ஓ.சிறுவயல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடக்க முயன்றனர்., திருச்சியில் இருந்து வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த மூர்த்தி படுகாயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story