/* */

கொலை வழக்கு: காரைக்குடியில் சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

காரைக்குடியில் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டதால் அவரது மகள்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கொலை வழக்கு: காரைக்குடியில் சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
X

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சசோதரிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த புதன் கிழமை ராஜ்குமார் என்பவர் அவரது நண்பர்களான வி.சி.க. கட்சியை சேர்ந்த கணேசன் மற்றும் அவரது கூட்டாளி சுந்தரமாணிக்கம் ஆகியோர் மது போதையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கணேசன், சுந்தர மாணிக்கம் கைது செய்யப்பட்ட நிலையில் கணேசன் மனைவி தேன்மொழி மற்றும் அவரது மகன் நிஷாந்த் ஆகியோரும் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனது தாயையையும் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்த்ததால் அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள் அஸ்விதா, நிவேதா ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் மயக்கமடைந்து கிடந்த சகோதரிகளை உறவினர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு சேர்த்தனர். விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சகோதரிகளின் உறவினர்கள் காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

Updated On: 8 Jan 2022 8:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  4. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  9. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி