/* */

தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி புகார்: அஇமூமுக மாநில நிர்வாகி கைது

கடந்த 2018 ஆண்டு 5 கோடியை, டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி  புகார்: அஇமூமுக மாநில நிர்வாகி  கைது
X

தெலங்கானாவில் ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில், அ.தி.மு.க கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்ட ராஜசேகர் (எஸ்.ஆர். தேவர்) என்பவரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக உள்ள எஸ்.ஆர். தேவர் என்ற ராஜசேகர் என்பவரை, தெலங்கானாவில் இருந்து வந்த 5 பேர் கொண்ட போலீசார் நேற்று கைது செய்தனர். இவரை, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணைக்காக தெலங்கானா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தெலங்கானாவில் உள்ள காமிநேனி மருத்துவமனைக்கு, ரூ. 300 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, கடந்த 2018 ஆண்டு டாக்குமெண்ட் சார்ஜ் என்று ரூ.5 கோடியை வாங்கினாராம். இந்நிலையில், கடன் வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக, கிருஷ்ணபிரசாத் (எ) லெட்சுமிநாரயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டார்.

Updated On: 1 Sep 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...