/* */

காரைக்குடியில் யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல்

காரைக்குடியில் பல லட்சம் பெறுமானமுள்ள யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை

HIGHLIGHTS

காரைக்குடியில் யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல்
X

காரைக்குடி அருகே கைப்பற்றப்பட்ட தந்ததிலாலான கலைப்பொருட்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 20ற்கும் மேற்பட்ட பழங்கால கலைப் பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன.இக்கடைகளில் யானைத் தந்தத்தால் ஆன, வன உயிரினங்களின் உறுப்புகளைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை வன நுண்ணறிவு மற்றும் புலனாய்வு உதவி வன பாதுகாவலருக்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் இன்று காரைக்குடி பகுதி உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் துணையோடு பழங்கால கலை பொருட்கள் கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட எழுத்தாணி, விளையாட்டு பொம்மைகள், தாயக் கட்டைகள், குங்குமச்சிமிழ், மற்றும் மான் கொம்பு, புலி பல் உட்பட பல பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கருதப்படும் நிலையில்,பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சிவகங்கையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணைக்காக கலைப்பொருள் வியாபாரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Updated On: 15 Feb 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  2. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  3. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  4. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  5. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  6. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்