/* */

வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா: ஒருவர் கைது

வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா கொடுத்து மோசடி செய்ததாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா: ஒருவர் கைது
X

கைதான ராஜவினி.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூங்குடியைச் சேர்ந்த ஹேமலதா, பிரேமலதா ஆகியோர், 2015-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு செய்தனர். அப்போது, துணை வட்டாட்சியருக்கு சொந்தமான காருடைய ஓட்டுநராக இருந்த பனிப்புலன் வயலைச் சேர்ந்த ராஜவினி (36) என்பவர், ஹேமலதா, பிரேமலதா ஆகியோரிடம் இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாகவும், ரூ.60 ஆயிரம் தருமாறும் கேட்டுள்ளார்.

இதை நம்பி இருவரும் ராஜவினியிடம் ரூ.60 ஆயிரம் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அரசு முத்திரையுடன் வட்டாட்சியர் பெயரில் கையெழுத்திட்டு பட்டா கொடுத்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு கொடுத்த பட்டா போலி என தெரியவந்ததை அடுத்து, ஹேமலதா, பிரேமலதா ஆகியோர், கோட்டாட்சியர் பிரபாகரனிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் புகாரின் பேரில் தேவகோட்டை டவுன் எஸ்ஐ பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்து ராஜவினியை கைது செய்தார்.

Updated On: 26 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்