/* */

உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளை; கிராமமே அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்

காரைக்குடி அருகே உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளைையை கிராமமே நல்லடக்கம் செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

உயிரிழந்த கோவில் மஞ்சு விரட்டு காளை; கிராமமே அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
X

உயிரிழந்த காளையை அடக்க செய்ய ஊர்வலமாக எடுத்துச்செல்லும் மக்கள்.

மஞ்சுவிரட்டுக்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே செவரக்கோட்டை கிராமத்தில் உள்ள கருப்பர் கோயில் மஞ்சுவிரட்டு காளை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.

இதனையடுத்து, செவரக்கோட்டை கிராம மக்கள் தங்கள் வீட்டில் ஒருவர் இறந்தால் எப்படி நல்லடக்கம் செய்வார்களோ அது போல இறந்த மஞ்சு வரட்டு காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காளையை பாரம்பரிய முறைப்படி கொம்பு ஊாதி, கொட்டு அடித்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்று நல்லடக்கம் செய்தனர் .மஞ்சுவிரட்டு நல்லடக்க ஊர்வலத்தில் இறந்த காளையை கடவுளாக எண்ணி பெண்கள் குழவை பாடல்கள் பாடினர்.

இந்த ஊர்வலத்தில், கிராம மக்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். அடக்கம் செய்யும் போது குழந்தைகள், பெண்கள் சிலர் அழுது கண்ணீர் வடித்தது மஞ்சுவிரட்டு காளை மேல் உள்ள பாசத்தை கட்டியது அருகில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது .

Updated On: 1 Aug 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!