புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கம்

காரைக்குடியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவியர் காவல் துறையினர் கலந்து கொண்டனர். இந்த பேரணி காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சரஸ்வதி திருமண மஹால் வரை நடைபெற்றது.

Tags

Next Story
ai in future agriculture