வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
X

கோட்டையூர் அருகே உதயம் நகரில் காெள்ளை நடந்த துரைராஜ் வீட்டில் பாேலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் அருகே வீட்டு பின்பக்க கதவை உடைத்து 40 சவரன் நகை ரு.2.25 லட்சம் பணம் கொள்ளை.

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் அருகே உதயம் நகரில் வசித்து வருபவர் துரைராஜ் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 31ஆம் தேதி துரைராஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முத்துக்குமார் என்ற மகன் தனியார் வங்கியில் இருந்து 2.25 லட்சம் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு பாண்டிச்சேரி சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் பெட்டகத்தில் வைத்து இருந்த 40 சவரன் நகை 2.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். காலை வீட்டிற்கு வந்த முத்துக்குமார் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பள்ளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!