/* */

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த பெண் உட்பட 3 பேர் மீது போக்ஸோ வழக்கு

இந்த சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை

HIGHLIGHTS

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த பெண் உட்பட 3 பேர் மீது போக்ஸோ வழக்கு
X

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த பெண் உட்பட 3 பேர் மீது போஸ்கோ வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், 17 வயது பள்ளி மாணவியும் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவி, தன்னுடைய வகுப்புத் தோழி மூலமாக அறிமுகமான அழகு நிலையத்திற்குஸ தன்னுடைய தோழியுடன் கண் புருவம் திருத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அழகு நிலைய பொறுப்பாளருடன் நட்புரீதியாக பழக்கம் ஏற்பட்டு, பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக தெரிய வந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையை சேர்ந்த விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த லெட்சுமி (45) மற்றும் 17 வயது மாணவி மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின் எதிரிகள் லெட்சுமி, விக்னேஷ் என்பவரையும் கைது செய்து இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மகேஸ்வரி விசாரணை செய்து வருகிறார். மேலும், தலைமறைவாக உள்ள டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாணவிகளின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. ஆசை வார்த்தைக்கு ஏமாறும் இது போன்ற மாணவிகள் தொடர் கதையாகி வருகின்றனர். ஆனால் பெற்றோர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 16 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு