/* */

அடுத்தடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்றுபேரை கைது

விசாரணையில் ஏற்கெனவே பலமுறை மருத்துவமனையில் வளாகத்திலும் பிற பகுதிகளிலும் இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.

HIGHLIGHTS

அடுத்தடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்றுபேரை கைது
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த குன்றக்குடி போலீசார் அவர்களிடமிருந்த டூ வீலர்களை பறிமுதல் செய்தனர்.

காரைக்குடி அருகே பெரியகாரை பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன் தனது உறவினர் சிகிச்சைக்காக காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு தனது உறவினரை பார்க்கச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது. தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. உடனடியாக குன்றக்குடி போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீஸாரின் தொடர் விசாரணையில் ஏற்கெனவே இதேபோல் பலமுறை மருத்துவமனையில் வளாகத்திலும் பிற பகுதிகளிலும் இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது சிவகங்கை இடையமேலூர் சேர்ந்த அஜய் (22) ,திருப்புவனம் பகுதியை சேர்ந்த வேலு (35), மதுரை பகுதியைச் சேர்ந்த இளையபாரதி (26 ) ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தை திருடியது விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர் .

Updated On: 18 Sep 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  2. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  3. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  4. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  6. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  7. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  8. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  9. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு