/* */

சீமான் பாலியல் குற்றவாளி; அவருக்கு அருகதை இல்லை - ஜோதிமணி எம்.பி.,

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி, ராஜீவ்காந்தியை விமர்சிக்க அவருக்கு அருகதை இல்லை என ஜோதிமணி எம்.பி., தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சீமான் பாலியல் குற்றவாளி; அவருக்கு அருகதை இல்லை - ஜோதிமணி எம்.பி.,
X

பைல் படம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 18ம் தேதி விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து திமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ்காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ராணுவத்தை அனுப்பி ஒரு இனத்தையே அழித்தது என பல விஷயத்தை செய்துள்ளார் ராஜீவ்காந்தி என ஆவேசத்துடன் பேசினார்.


சீமானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது டுவிட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், சீமான் ஒரு பாலியல் குற்றவாளி எனவும், சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் தற்போது சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை அவருக்கெல்லாம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Updated On: 21 May 2022 4:16 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...