சேலம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ முகாம்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சேலம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சேலம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ முகாம்
X

கோப்பு படம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சேலம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், பசுவரெட்டிவளவு கிராமத்தில் 11.08.2023 அன்று கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கால்நடைகளுக்கு கால்நடை சிகிச்சை, குடற்புழு நீக்கம், செயற்கைமுறை கரூவூட்டல், சினை ஆய்வு, சினை பருவ ஒருங்கிணைப்பு, மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், சிறிய அளவிளான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கால்நடை நோய்புலானாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள், சாணம், ரத்தம், சளி, பால் ஆகியவற்றை ஆய்வு செய்யப்படவுள்ளது. கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி மற்றும் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் போடப்படவுள்ளது. கன்றுகள் பேரணியும் நடைபெறவுள்ளது.

சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மை செய்யும் விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. கால்நடை வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை குறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துறை வல்லுநர்களால் விவசாயிகளுக்கு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

எனவே பசுவரெட்டிவளவு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர் முகாமிற்கு தங்களது கால்நடைகளை பெருமளவில் கொண்டு வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Aug 2023 2:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  2. வணிகம்
    Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
  3. திண்டுக்கல்
    நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  4. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  5. சினிமா
    Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?
  6. ஆலங்குடி
    குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.13 லட்சம் நிவாரண...
  8. புதுக்கோட்டை
    ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மனுக்கொடுக்கும் போராட்டம்.
  9. சோழவந்தான்
    மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆணையர், கவுன்சிலர்கள்...