மல்லசமுத்திரம் சின்ன மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

சின்ன மாரியம்மன் கோவிலில் வரும் 3ல் குண்டம் திருவிழா நடைபெறுகிறது
மல்லசமுத்திரம் சின்ன மாரியம்மன் கோவிலில் கடந்த 20ம் தேதி கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாளை காலை 6:00 மணிக்கு பூவோடு எடுத்தல், மதியம் 3:00 மணிக்கு அம்மனுக்கு உலுப்பை கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 3ம் தேதி காலை 4:00 மணிக்கு மாதேஸ்வரன் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னிகரகம் எடுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து காலை 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின் பொங்கல் வைபவம் மற்றும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு பூங்கரகம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 4ம் தேதியன்று சிலம்பாட்டம், வண்டி வேடிக்கை, பொய்க்கால் குதிரை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விழா காலம் முழுவதும் தினமும் இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதிஉலா வருகிறார். இத்திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் அறங்காவலர் குழுவினர், பெரியகொல்லப்பட்டி, சின்னகொல்லப்பட்டி ஊர் பொதுமக்கள் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu