69வது ரயில் சேவா புரஸ்கார் விழா

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் 69வது ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தலைமையில், ரயில் விபத்துகளைத் தவிர்க்க உதவிய ஓட்டுனர் சசிகாந்த், தண்டவாள விரிசலைக் கண்டறிந்த நித்யா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கோட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பேசிய கோட்ட மேலாளர், கோட்டத்துக்குட்பட்ட 15 ரயில் நிலையங்களில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், இப்பணிகள் சில மாதங்களில் நிறைவடையும் என்றும் தெரிவித்தார். மேலும் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படும் விகிதம் 93.35 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், சிக்னல் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டதால் ரயில்களின் சராசரி வேகம் 130 கி.மீ.யில் இருந்து 286 கி.மீ. ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu