தொடரும் பைக் திருட்டு, மக்கள் அதிர்ச்சி

தொடரும் பைக் திருட்டால் காரிப்பட்டி மக்கள் கலக்கம்
காரிப்பட்டியில் அண்மைக் காலங்களில் வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். காரிப்பட்டி நேரு நகரைச் சேர்ந்த அஜித்குமார் (24) என்பவரின் 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக் ஒரு மாதத்திற்கு முன் இரவில் மர்ம நபர்களால் திருடப்பட்டது. அதேபோல் கருணாநிதி காலனியைச் சேர்ந்த ஜோதி கண்ணன் (27) என்பவரின் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த 'டியோ' மொபட் கடந்த மூன்றாம் தேதி இரவில் திருடுபோனது. அதே காலனியில் தனுஷ் (23) என்பவரின் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த 'ஆர்15' பைக்கின் பூட்டை உடைத்து திருடர்கள் சிறிது தூரம் கொண்டு சென்ற நிலையில், மேலும் தள்ளிச்செல்ல முடியாமல் விட்டுச் சென்றுள்ளனர்.
காரிப்பட்டி பகுதியில் வாகனத் திருட்டுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த 18ஆம் தேதி இரவு நேரு நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணி (41) என்பவரின் வீட்டு முன் நிறுத்தியிருந்த 'சைன்' பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றதுடன், மேலும் மூன்று பேரின் பைக்குகளைத் திருட முயற்சி நடந்துள்ளது. கருணாநிதி காலனியில் இரண்டு பேர் இரவில் பைக் திருடிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இத்தகைய அடுத்தடுத்த திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் தங்கள் வாகனங்களை வீட்டு முன் நிறுத்தி வைக்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காரிப்பட்டி பகுதி மக்கள் காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றும், சிசிடிவி கண்காணிப்பு முறையை பலப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அருகிலுள்ள பகுதிகளிலும் இதேபோன்ற வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பான முறையில் பூட்டி வைக்குமாறும், சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu