/* */

பொங்கல் பரிசில் புடவை வழங்கல், ஆண்கள் அதிருப்தி

பொங்கல் பரிசில் புடவை வழங்கல், ஆண்கள் அதிருப்தி
X

சேலத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில் ஆண்களுக்கு வேஷ்டிக்கு பதில் புடவை கொடுத்து அவமதிப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய் முந்திரி, திராட்சை உள்ளிட்டவைகளுடன் ஆண்களுக்கு வேஷ்டி துண்டும், பெண்களுக்கு புடவையும் வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 12 இடங்களில் 88 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வேஷ்டி துண்டு மற்றும் புடவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகுப்புடன் ஆண்களுக்கு வழங்கப்படும் வேஷ்டி துண்டுக்கு பதிலாக இருபாலருக்கும் புடவையை மட்டும் தருவதாக குற்றம் சாட்டினர். தமிழக அரசு அறிவித்தபடி ஆண்களுக்கு வேஷ்டி துண்டு வழங்க வேண்டும் என்று கூறிய பயனாளிகள் வேஷ்டிக்கு பதிலாக ஆண்களுக்கும் புடவையை தருவது தங்களுக்கு அவமரியாதையாக உள்ளது என தெரிவித்தனர்.

Updated On: 12 Jan 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!