நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்குரூ.32.62 லட்சம் நிதி

நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்கு ரூ.32.62 லட்சம் நிதி வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட சங்கங்கள் தங்களது ஆண்டு நிகர லாபத்தில் இருந்து கூட்டுறவு ஒன்றியத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதி வழங்கி வருகின்றன. இந்த வழக்கத்தின்படி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 2023-24ம் ஆண்டு நிகர லாபத்தில் இருந்து நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத்திற்குச் செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியாக ரூ.19,56,891, கூட்டுறவு கல்வி நிதியாக ரூ.13,04,594 என மொத்தம் ரூ.32,61,485க்கான காசோலையை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் சதீஸ்குமார், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் சரவணனிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் நாமக்கல் கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu