தனியார் பஸ் டிரைவர்கள் தகராறு 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு..!

ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இரண்டு தனியார் பஸ் டிரையர்கள் இடையே 'டைமிங்' பிரச்னையில் தகராறு செய்து கொண்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கம்
சேலம் மாவட்டம் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, சென்னை, விழுப்புரம், பெரம்பலுார், திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் டிரைவர்கள் இடையே வாக்குவாதம்
நேற்று காலை 8:30 மணியளவில் 'பாலாஜி மற்றும் பி.எம்.எஸ்.,' ஆகிய பஸ் டிரைவர்கள் செல்லதுரை 32, சபரிராஜா 35, ஆகியோர் இடையே 'டைமிங்' பிரச்னை காரணமாக ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தனர்.
தகராறு காரணமாக போக்குவரத்து பாதிப்பு
ஒரு கட்டத்தில் பஸ்சை முன்புறமாக நிறுத்தி இருவரும் தாக்கிக் கொண்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கு மேல் மற்ற பஸ்களும் செல்ல முடியாத சூழல் உருவானது.
போலீஸ் தலையீடு
ஆத்துார் டவுன் போலீசார் தனியார் பஸ்களை அப்புறப்படுத்தினர். அதன்பின் மற்ற பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu