/* */

நாள் முழுவதும் பிணக்கோலம்.. திருவிழாவில் பக்தர் விநோத நேர்த்திக்கடன்

Salem News Today: சேலம் கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவர் பிணக்கோலத்தில் படுத்த நிலையில் தனது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

நாள் முழுவதும் பிணக்கோலம்.. திருவிழாவில் பக்தர் விநோத நேர்த்திக்கடன்
X

பிணக்கோலத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.

Salem News Today: சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன், காளியம்மன் கோவிலும் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி சிறுவர், சிறுமிகளின் சிலம்பாட்டம், மல்லர் கம்பத்தில் ஏறுதல் மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து பக்தர்களின் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், திருவிழாவில் பிணக்கோலத்தில் படுத்த நிலையில் பக்தர் ஒருவர் தனது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். இதற்காக நேற்று காலையில் அந்த பக்தர் படுக்கையில் பிணம் போல் படுத்து ஆடாமல் அசையாமல் இருந்தார்.

மேலும் இந்த வினோத நேர்த்திக்கடனுக்காக கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கு பிணம் போன்று படுத்திருந்த பக்தருக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் உடன் இருந்த மற்ற பக்தர்கள் செய்தனர். மேலும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை போல் வந்து துக்கம் விசாரித்து சென்றனர்.

பின்னர் பாடையில் பக்தரை தூக்கி வைத்து இறுதி ஊர்வலமாக சரக்கு வாகனம் ஒன்றில் பூக்களால் அலங்கரித்து தெருத்தெருவாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கொண்டலாம்பட்டியில் உள்ள மயானத்திற்கு ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு ஒரு கோழியை மட்டும் புதைத்தனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கோவிலுக்கு திரும்பி வந்தனர்.

மேலும் பிணம் போன்று படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் உள்பட அவருடன் வந்தவர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டு சென்றனர். சவ ஊர்வல வினோத நேர்த்திக்கடன் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updated On: 8 April 2023 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  6. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  8. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  10. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது