/* */

சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!

சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!
X

சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 5 1/2 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்படட்ன. இது தொடர்பாக தாபா ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒமலூரை அடுத்த காமலா புரம் பிரிவு ரோடு அருகே பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் சிங் ஜாட்வால் என்பவரின் மகன் மான்சிங் தாபா ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பகுதியில் 12 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வரும் ராஜஸ்தானி தாபாவில் இந்த வழியே பயணிக்கும் பலரும் சாப்பிட்டு செல்வது வழக்கம். இவர் சமீக காலமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தடை செய்யப்பட்ட பொருட்களை காரில் கடத்தி வருவதாகவும் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் காமலாபுரம் பிரிவு அருகே அமைந்துள்ள ராஜஸ்தானி ஹோட்டல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினரைப் பார்த்ததும் ஒரு கார் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளது. 2 கார்கள் பிடிபட்டன.

பிடிபட்ட காரைச் சோதனை செய்த போது அதில் மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. காவலர்கள் அந்த கார் உட்பட 2 கார்களை பறிமுதல் செய்து , ஓட்டி வந்தவரையும் கைது செய்தனர்

பெங்களூருவிலிருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி வரப்பட்டது தொடர்பாக தாபா உரிமையாளர் மான்சிங்கை கைது செய்தனர். மொத்தம் 5 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 9 லட்சம் மதிப்புள்ள 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 4 Jun 2023 4:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை