தி காவேரி பொறியியல் கல்லுாரியில் தொழில் முனைவோர் திறன் பயிற்சி

தி காவேரி பொறியியல் கல்லுாரியில் தொழில் முனைவோர் திறன் பயிற்சி
X
தொழில் முனைவோர் திறனுக்கான பயிற்சி பட்டறை, மேச்சேரி கல்லுாரியில் மிகப்பெரிய தொடக்கம்

தி காவேரி பொறியியல் கல்லூரியில் "நவீனத்துவம் மற்றும் தொழில்முனைவோர் திறன்" பயிற்சிப் பட்டறை

மேச்சேரியில் உள்ள தி காவேரி பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் துறை மற்றும் இன்ஸ்டிடியூட் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில் "நவீனத்துவம் மற்றும் தொழில்முனைவோர் திறன்" தலைப்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் துரைசாமி தலைமை வகித்தார்.

நிகழ்வின் சிறப்பு அம்சமாக, சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் "வாழ்ந்து காட்டுவோம்" திட்டத்தைச் சார்ந்த இளம் தொழில்முனைவோர் கயல்விழி கலந்துகொண்டார். அவர் மாணவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் சிறந்த பரிந்துரைகளை வழங்கி, இளம் தொழில்முனைவோர் பற்றி விரிவான விளக்கங்களை அளித்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக வேளாண் பொறியியல் துறைத் தலைவர் ஞானசுந்தர் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் கௌரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், செயலர் இளங்கோவன், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி, முதன்மை செயல் அலுவலர் சண்முகநாதன், செயல் அலுவலர் கருப்பண்ணன், பேராசிரியை வித்யா, உதவிப் பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story