/* */

தேவூரில் 300 ஆண்டு பழமையான திம்மராய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

சேலம் மாவட்டம் தேவூரில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த திம்மராய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தேவூரில் 300 ஆண்டு பழமையான திம்மராய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா
X

திம்மராய பெருமாள் ஆலய கோபுர மகா கும்பாபிஷேகம் விழா.

சேலம் மாவட்டம், தேவூர் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 10 காலமாக புதிய கோபுரம் கட்டிடங்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் ஒன்றாக கூடி கோவில் கும்பாபிஷேக விழா செய்ய முடிவு எடுத்தனர். கும்பாபிஷேக விழாவில் முக்கிய நிகழ்வாக கடந்த 19ம் தேதி சனிக்கிழமை கோ பூஜை செய்து விசேஷ மேள வாத்தியங்கள் முழங்க, கேரளா செண்டை மேளதாளத்துடன் குதிரை பசு உடன் பக்தர்கள் விமான கலசத்துடன் தீர்த்த குடம் எடுத்து கோணக்ழுத்தானூர், மயிலம்பட்டி,மேட்டுகடை, வழியாக ஊர்வலமாக சென்று தேவூர் திம்மராய பெருமாள் சன்னதியில் தீர்த்த குடம் வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பிரவேசம் , அக்னி பிரம்ம சதுஸ்தான பூஜைகள் நடைபெற்றது . 21ம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ சமேதராக திம்மராய பெருமாள் ஆலய கோபுர மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிலை சுற்றிலும் திரளாக நின்று கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பினர். ஆலய கோபுரத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் மூலம் பக்தருக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீ திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை வழிபாட்டு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேவூர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தேவூர், அம்மாபாளையம், காணியாளம்பட்டி, கோணக்கழுத்தானூர், சாத்தந்தை குல பங்காளிகள் பள்ளிப்பட்டி காருவள்ளி மூங்கிவேரி பட்டி, குண்டுகாட்டூர், மூக்கனூர், எலத்தூர், பெருமாபாளையம், குலதெய்வ பங்காளிகள் செய்திருந்தனர்.

Updated On: 23 March 2022 3:01 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  2. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  3. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  4. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  7. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  9. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  10. ஈரோடு
    மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு