சேலத்தில் இண்டர்நெட் மோசடி

சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்த 26 வயதான பொறியியல் பட்டதாரி முத்து பரத் என்பவர் ஆன்லைன் மோசடியால் ரூ.5 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார். ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒருவர் அவரை தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைகாட்டினார். முதலில் ரூ.5,000 முதலீடு செய்த முத்து பரத்திற்கு லாபம் கிடைத்ததைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் மூலமாக மற்றொருவர் அவரை தொடர்பு கொண்டு அதிக பணம் முதலீடு செய்தால் இன்னும் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பவைத்தார். இதனால் ஆசைப்பட்ட முத்து பரத் ரூ.5.16 லட்சம் செலுத்தினார். ஆனால் அதன்பிறகு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மோசடி செய்தவரின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முயன்றபோது, அது முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்து பரத் நேற்று சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu