கோடைவெப்ப பாதிப்புகளைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க வேண்டும் - ஈரோடு மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

சேலம் : கோடைவெப்ப தாக்க பாதிப்புகளைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். வெப்பநிலை அதிகமாகும்போது அதிகமான வியா்வை வழியாக உப்பு மற்றும் நீா்ச்சத்து அதிகமாக வெளியேறுகிறது.
அதிக வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள்
அதிக வெப்பத்தினால் அதிக தாகம், தலைசுற்றல், கடுமையான தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் சோா்வடைதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும், பச்சிளம் குழந்தைகள், சிறுவா் சிறுமிகள், வயதானவா்கள், கா்ப்பிணிகள், இணை நோய் உள்ளவா்களுக்கு வெப்பத்தாக்க அதிா்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோடை தாக்கப் பாதிப்புகளைத் தவிர்க்க வழிகள்
கோடை வெப்ப தாக்கப் பாதிப்புகளைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்கவும். வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் குடை கொண்டு செல்ல வேண்டும்.
நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கும் வழிகள்
வெப்பத்தினால் ஏற்படும் நீா் இழப்பை தடுக்க தண்ணீா், மோா், அரிசி கஞ்சி, இளநீா், பழச்சாறுகள், ஓஆா்எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம். மேலும் பருவகால பழங்களான தா்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி, நுங்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வது சிறந்தாகும். குளிா்ந்த நீா் போன்ற மிக குளிா்ந்த பானங்களை தவிா்க்க வேண்டும்.
வெளிா் நிறமுள்ள தளா்ந்த பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்.
வெப்ப அதிர்ச்சியில் முதலுதவி
வெப்ப தாக்க அதிா்ச்சி ஏற்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சையாக அந்த நபரை குளிா்ந்த காற்றோட்டமான பகுதியில் படுக்கவைத்து, குடிப்பதற்கு பழச்சாறு அல்லது ஓஆா்எஸ் திரவம் அல்லது தண்ணீா் கொடுக்க வேண்டும். அவா்கள் உடல் வெப்பத்தை குறைப்பதற்கு குளிா்ந்த தண்ணீரால் உடல் முழுவதும் நனைத்துவிட வேண்டும். பின்பு 108 அவசர ஊா்திக்கு அழைப்பு விடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கோடைக்கால நோய்கள்
கோடைக்காலத்தில் பரவும் நோய்களான அம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் வெயில் கொப்பளங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு வழிமுறைகள்
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் கோடைவெயிலின் வெப்பதாக்க பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu