தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் விவசாயிகள் பாதிப்பு

வெண்ணந்தூர், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், நடுப்பட்டி, அலவாய்ப்பட்டி, அத்தனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மரங்களில் 'ரூகோஸ்' எனப்படும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்து வருவதால் விவசாயிகள் கடும் கவலையடைந்துள்ளனர், தென்னை மரங்களின் இலைகளை தாக்கி சாறு உறிஞ்சும் பல்வேறு பூச்சிகளில் இந்த 'ரூகோஸ்' வெள்ளை ஈ மிகவும் முக்கியமான ஒரு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சியாக கருதப்படுகிறது, குறிப்பாக கடந்த ஆண்டிலும் இந்த ஈக்களின் தாக்குதல் அதிகமாகவே காணப்பட்ட நிலையில், தற்போது கோடை காலம் என்பதால் இந்த ஈக்களின் தாக்குதல் இன்னும் அதிகமாக பரவி விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது, இந்த வெள்ளை நிற ஈக்கள் தென்னை மரங்களின் இலைகளுக்குப் பின்னால் அமர்ந்து சாறு உறிஞ்சுவதுடன், அவற்றின் உடலில் உள்ள வெள்ளை நிற மெழுகு போன்ற பொருளை கொண்டு இலைகளின் பின்புறத்தில் சுருள் வடிவத்தில் முட்டையிட்டு தென்னை மரங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, இவற்றால் பாதிக்கப்பட்ட இலைகள் ஒரு சில நாட்களிலேயே தங்களது இயல்பான பச்சை நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மாறி செயலிழந்து போகின்றன, இந்த மோசமான தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெண்ணந்தூர் பகுதி விவசாயிகள் வலுவான கோரிக்கை விடுத்துள்ளனர், இந்த பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படாவிட்டால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வருமானம் குறைந்து பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu