/* */

சேலம் மாவட்டத்தில் ரூ.164.11 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை

சேலம் மாவட்டத்தில் ரூ.164.11 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் ரூ.164.11 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு  தடை
X

பைல் படம்

சேலம் மாவட்டத்தில் விதிமுறை மீறி, தரக்குறைவான விதைகள் விற்ற 203 விதை விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்ததாவது:

பயிர்விளைச்சல் அதிகரித்து அதிகமான வருமானம் ஈட்டித்தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானதாகும். எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் தரும் இரகங்கள் / வீரிய ஓட்டு விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற அரசு வேளாண்மை விரிவாக்க மையம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே உரிய விலைப்பட்டியலுடன் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

விலைப்பட்டியல் பெறும் போது பட்டியலில் பயிர், ரகம், நிலை, வாங்கிய அளவு குவியல் எண், காலாவதி நாள், பட்டியல் முகவரி, தொடர்பு எண் குறிப்பிட்டு உள்ளதா என அறிந்து விதைகளை வாங்கவேண்டும். தரமான விதைகளை, சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையிலும் போலி விதை விற்பனையை தடுக்கவும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இத்துறை இயக்குநர் வழங்கும் வழிமுறைபடி சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தின் மூலம் இதுவரை 118 அரசு, 192 அரசுசாரா மற்றும் 842 தனியார் விதை விற்பனை நிலையங்களுக்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் சேலம், ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர், தலைவாசல், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு விதை ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வலுவலர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு, அரசுசாரா மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைகளின் தரம், விலை மற்றும் எடை குறித்து உரிய கால அட்டவணைப்படி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆய்வின் போது விதை விற்பனைக்கான உரிமம், இருப்பு, விலைப்பட்டியல் பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், பதிவுச்சான்றிதழ், முளைப்பு திறனறிக்கை ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்வர். ஆய்வின் போது விதைகளின் முளைப்புத்திறன் உறுதி செய்திட விதைமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்காக சம்மந்தப்பட்ட சேலம், நாமக்கல் மற்றும் கோவை விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

விதை விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய முளைப்புத்திறன் முடிவுகள் மற்றும் இதர வெளிமாநில சான்று பெற்ற விதைகளுக்கு படிவம் 2 ஆகியவை பராமரிக்க வேண்டும்.

விதைகள் இருப்பு வரப் பெற்றவுடன் பணி விதை மாதிரிகள் சேகரித்து சம்மந்தப்பட்ட விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறன் முடிவுகளில் தேர்ச்சி பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் விவர அட்டை குறைபாடுகள் உள்ள விதைகள் மற்றும் காலாவதியான விதைகளை விற்பனை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறி கூடுதல் விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் பராமரிக்காத விதை விற்பனையாளர்களின் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 01.04.2023 முதல் இதுவரை விதிமுறை மீறிய / தரக்குறைவான விதைகள் விற்ற 203 விதை விற்பனை நிலையங்கள் மீது துறைரீதியாக / சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ.164.11 இலட்சம் மதிப்புள்ள 22.34 மெட்ரிக் டன் விதைகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் பட்டியலுடன் தரமான விதைகளைப் பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கெள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Dec 2023 3:25 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது