/* */

சுதந்திரதினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

சுதந்திரதினத்தை முன்னிட்டு  சேலம் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்
X

பைல் படம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசால் வருகின்ற 15.08.2023 சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15.08.2023 செவ்வாய்கிழமை அன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தினங்களில் உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Aug 2023 10:24 AM GMT

Related News