ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதல்: 9 பேர் காயம்

Salem News Today: ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதல்: 9 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மற்றும் டிராக்டர்.

Salem News Today: சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஓட்டுநர் செந்தில் (வயது 44) என்பவர் ஓட்டிச் சென்றார்.

வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரத்தில் இருந்து ஆத்தூரை அடுத்த சொக்கநாதபுரத்திற்கு செங்கற்கள் பாரம் ஏற்றிக் கொண்டு டிராக்டர் வந்துகொண்டிருந்தது. இந்த டிராக்டரை புதுப்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (44) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடி அருகே டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்தது.

இந்த விபத்தின் இடிபாடுகளில் சிக்கி டிராக்டர் டிரைவர் ராமச்சந்திரன், புதுப்பாளையத்தைச் சேர்ந்த கஸ்தூரி (38), பழனிசாமி (44), மாயவன் (33) ஆகியோர் காயமடைந்தனர்.

மேலும் பேருந்தில் வந்த சேலத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (40), ஆத்தூர் முல்லைவாடியைச் சேர்ந்த சுக்காயி (60), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த லட்சுமணன் (40), சேலம் ராஜசேகர் (65), நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (52) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்த 9 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து டிராக்டர் மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jun 2023 6:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  2. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
  3. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  4. குமாரபாளையம்
    பிளஸ் டூ மாணவர்களே! உங்கள் வாய்ப்புக்கு முந்துங்கள்...!
  5. ஈரோடு
    விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
  6. வணிகம்
    Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
  7. திண்டுக்கல்
    நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  8. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  9. சினிமா
    Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?
  10. ஆலங்குடி
    குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்