அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு..!

அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு..!
X
அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்தவர் தனபால் 50. அதே பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி நாமக்கல்லில் 'நீட்' தேர்வுக்கு மகள் படிப்பதால் அவருடன் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தனபால் அருகே உள்ள அரிசி ஆலைக்கு சென்றார்.

பூட்டு உடைக்கப்பட்டது

நேற்று காலை 8:00 மணிக்கு திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ அருகே இருந்த சாவியை மர்ம நபர்கள் எடுத்து, அதன் அறைகளில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 கிலோ வெள்ளி பொருட்கள் 10,000 ரூபாயை திருடிச்சென்றது தெரிந்தது.

போலீசார் விசாரணை

அவர் தகவல்படி கெங்கவல்லி போலீசார் ஆய்வு செய்தனர். போலீசார் கூறுகையில் வெளிப்புற கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடுகிறோம் என்றனர்.

Tags

Next Story
கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!