சேலத்தில் முக்கிய விடுமுறை நாட்களில் 350 சிறப்பு பஸ்கள்

சேலத்தில் முக்கிய விடுமுறை நாட்களில் 350 சிறப்பு பஸ்கள்
X
சேலம் கோட்டத்தில், அமாவாசை மற்றும் ரம்ஜான் முன்னிட்டு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் வார இறுதி நாட்கள், பங்குனி அமாவாசை, தெலுங்கு புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் 31 வரை 350 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும். பயணிகள் அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம் அல்லது அதற்கான செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஏப்ரல் 29ல் பங்குனி அமாவாசை நிமித்தம் சேலம், தர்மபுரியில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர்கோவில் பகுதிகளுக்கும் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கோட்ட நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story