/* */

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு
X

மாதிரி படம்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் நேரடி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது

அதன்படி 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி- 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். அதேபோல் 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும், 12ஆம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும். 11ஆம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2 ஆம் தேதி வரை செய்முறைத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அத்துடன் மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 3 மணி நேரமாக இருந்த செய்முறைத் தேர்வுக்கான நேரத்தில் ஒரு மணி நேரத்தை குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இனி செய்முறைத் தேர்வுகள் 2 மணி நேரம் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பின் காரணமாக மாணவர்களிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Updated On: 23 April 2022 12:23 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்