/* */

5 மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்': மக்களே எச்சரிக்கையாக இருங்க...

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: மக்களே எச்சரிக்கையாக இருங்க...
X

வானிலை ஆய்வு மைய செயற்கைக்கோள் படம்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள பயிர்களுக்கு கடுமையான சேதம், மரங்களை வேரோடு பிடுங்குதல், முறையான / முறைசாரா குடியிருப்புகளுக்கு சேதம், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு, உள்நாடு / ஆற்றங்கரை வெள்ளம், கால்நடைகளுக்கு சேதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவடத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Updated On: 26 Nov 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !