இராணிப்பேட்டை மாவட்டத்தில் " SMILE"' கடன்திட்டம் .

ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் சார்பில் "SMILE" கடன் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களின் குடும்பத்தில், வருவாயை ஈட்டி வந்தவர்கள் கொரோனா தாக்கி உயிரிழந்த நிலையில், குடும்பங்கள் நலிவடைந்து காணப்படுகிறது. எனவே, அவர்களுக்காக தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் சார்பில்" SMILE '" கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது .
அத்திட்டத்தில், ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் 5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு கடனில் 80 சதவீதம் கடனாகவும் மீதி 20 சதவீதம் மானியமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயனாளிகள் 18 வயது முதல் 60 வரை இருந்து ஆண்டு வருமானம், 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
மேலும், வருவாய் ஈட்டி வந்தவர்கள் கொரோனா தாக்கி இறந்ததற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மை அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu