Begin typing your search above and press return to search.
மாமன்டூரில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபர்கள் கைது.
காவேரிப்பாக்கம் அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மினி வேனில் மணல் கடத்திய வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமன்டூர் பாலாற்றங்கரையருகே அதே ஊரைச்சேர்ந்த சௌந்தர் என்பவரது நிலம் உள்ளது
அதிலிருந்து அனுமதியின்றி மினி லோடு வேன் ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு வந்தது . அப்போது எதிரே போலீஸார் வருவதைக் கண்டதும் வேனில் வந்தவர்கள் மற்றும் பைக்கில் வந்தவர் அனைவரும் தப்பி ஓடினர் .
போலீஸார் மணல் ஏற்றிவந்த மினிலாரி,மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குபதிவு விசாரித்த போலீஸார் அனுமதியின்றி மணல் அள்ளிய மாமன்டூரைச் சேர்ந்த சௌந்தர்(24), அவருக்கு துணையாக இருந்த அதே ஊரைச் சேர்ந்த முத்து(24) இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.