சோளிங்கரில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி

சோளிங்கரில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய பயற்சியை வேளாண்துறை நடத்தியது
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் வேளாண்துறை சார்பில் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்து, இணைய வழி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட இணை இயக்குநர் வேலாயுதம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உதவி இயக்குநர் கண்ணன் வரவேற்றார்,
பின்பு, உதவி இயக்குநர் விஸ்வநாதன்,வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் நந்தகுமார் ஆகியோர் இயற்கை விவசாயம் பற்றியும் அதன் அவசியத்தையும் விளக்கினர்.
அதில் உரங்கள் இடுவது, சுழற்சி முறையைக் கடைபிடிப்பது, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல் ஆகியவை தயாரிப்பது குறித்து படவிளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலுமிருந்து, ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu