/* */

சோளிங்கரில் வாரச்சந்தை: எம்ஏல்ஏ திறந்து வைத்தார்

சோளிங்கர் அடுத்த கொளத்தேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தையை முனிரத்தினம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சோளிங்கரில் வாரச்சந்தை: எம்ஏல்ஏ திறந்து வைத்தார்
X

சோளிங்கர் அருகே வார சந்தையை திறந்து வைக்கும் எம்எல்ஏ முனிரத்னம் 

சோளிங்கர் அடுத்த கொளத்தேரி ஊராட்சியில் ஊராட்சி மன்றக் கட்டிடம், வாரச்சந்தை திறப்பு விழா மற்றும் செடி நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிபாரதி என்கின்ற சுப்பிரமணி தலைமை தாங்கினார், ஒன்றிய குழுத்தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்எல்ஏ கலந்து கொண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

அதனைதொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு காய்கறி வழங்கி வாரச்சந்தையை தொடங்கி வைத்தார். பின்னர் பல வகை மரக்கன்றுகளையும் நட்டார்.

நிகழ்ச்சியில் சோளிங்கர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் அன்பரசி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 March 2022 12:38 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...