/* */

வெள்ளம் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள முடிவு

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள முடிவு

HIGHLIGHTS

வெள்ளம் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள முடிவு
X

நெமிலியில் நடைபெற்ற  ஒன்றியகுழு உறுப்பினர்கள்  கூட்டம் 

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக் குழுத்தலைவர், வடிவேலு தலைமையில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஒன்றியத் துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் அனைவரையும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழுத் தலைவர் வடிவேலு பேசியதாவது;

நெமிலி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் கடந்த சிலநாட்களாகப் பெய்த தொடர் கனமழையில் பலர் வீடுகள் இழந்து உள்ளன்ர். மேலும் சில இடங்களில் தண்ணீர் புகுந்து அவதிப்பட்டுள்ளனர். .அதேபோல் விவசாய நிலங்களில் விளைவித்த பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது.சாலைகள் சேதமடைந்து போக்குவரத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் .பலர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்கள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நாம் அனைவரும் உரி்ய நடவடிக்கைகள் எடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் அனைவரும் தீவிர அக்கறை காட்டி பணியாற்ற வேண்டும். அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரின் கோரிக்கைகள் நிறைவேற்ற வழிவகை செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்

கூட்டத்தில் உறுப்பினர்கள், தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கைகள் வைத்து பேசினர்.

மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், வேளாண்துறை, கல்வித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறைசார்ந்த கோரிக்கைகளை வைத்தனர்.

Updated On: 3 Dec 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது