/* */

ஓச்சேரிஅருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதி 2பேர் படுகாயம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரிஅருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்

HIGHLIGHTS

ஓச்சேரிஅருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதி 2பேர் படுகாயம்
X

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த நெமிலி பெரும்புலிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் வயது(, 40) என்பவர் அவரது பைக்கில் பக்கத்து வீட்டில் உள்ள உதய குமார் என்பவருடன் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் போட சென்றுள்ளார்

பைக்கை ஓட்டி சென்ற தயாளன், பெட்ரோல் போடுவதற்காக சித்தஞ்சி காளி கோயில் அருகே சென்னை- பெங்களூரு நெடுச்சாலையிலிருந்து எதிர்சாலைக்கு கடக்க முயன்றுள்ளார். அதே திசையில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மிக வேகமாக வந்து பைக் மீது மோதியது.

அதில் தயாளன், உதயகுமார் இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அதில் தயாளன், உதயகுமார் இருவரும் படுகாயமடைந்தனர். உடனே , அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேலும்,.விபத்து குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 25 July 2021 4:11 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்