/* */

மழைநீர் சூழ்ந்து தத்தளித்த இருளர் குடும்பங்களை மீட்ட கலெக்டர்

பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூரில் மழைநீர் சூழ்ந்து தவித்து வந்த இருளர் குடும்பங்களை கலெக்டர் நேரில் சென்று மீட்டு முகாமில் தங்கவைத்தார்

HIGHLIGHTS

மழைநீர் சூழ்ந்து தத்தளித்த இருளர் குடும்பங்களை மீட்ட கலெக்டர்
X

பணப்பாக்கம் இருளர் குடியிருப்பில் உள்ளவர்களை மீட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் கிராமத்தில் இருளர் சமுதாயத்தைச் வசிக்கும் குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்து தத்தளித்து வருவதாக இராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் பாஸ்கரப் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் மேலபுலம்புதூருக்குச் சென்றசென்ற மாவட்ட ஆட்சியர் , இருளர் வசித்து வரும் இடத்தைப் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த 13 இருளர் குடும்பத்தினரை அருகிலுள்ள கோயிலில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருமாறு கிராம நிர்வாக அலுவருக்கு உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாயத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு இதுவரை குடும்ப அட்டை, ஆதார் போன்றவை எதுவும்வழங்கப் படவில்லை வேதனையுடன் தெரிவித்து அவற்றை வழங்கிடுமாறும் கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிரந்தர குடியிருப்பு, ரேஷன், ஆதார் போன்ற அடைப்படை வசதிகளனைத்தையும் பெற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..

Updated On: 28 Nov 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்