ஓச்சேரி அருகே விபத்து: கூலித்தொழிலாளி பலி.

ஓச்சேரி அருகே விபத்து: கூலித்தொழிலாளி பலி.
X
ஓச்சேரி அருகே பைக் மீது மினி பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி.

இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ,ஓச்சேரி அருகே களத்தூர் குட்டைத்தெருவைச் சேர்ந்த பொன்மொழி,(30), கூலித் தொழிலாளியான இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பள்ளம் வெட்ட கூலிக்கு சென்றார்.

பின்பு , வீடுதிரும்ப அவர் ஓச்சேரிக்கு அதிகாலை வந்து அங்கு விட்டிருந்த அவரது பைக்கில் கிளம்பி களத்தூர் நோக்கி வந்தார். களத்தூர் அருகே , மேம்பால கட்டுமானப் பணிக்கான சர்வீஸ் ரோடில் வந்த பொன்மொழியின் பைக் மீது எதிரே வேகமாக வந்த மினி பஸ் பயங்கரமாக மோதியது ,

அதில்,படுகாயமடைந்த பொன்மொழியை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
ai solutions for small business