சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா இன்று தொடக்கம்

பைல் படம்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், புகழ் பெற்றதுமான லட்சுமிநரசிம்மர் கோயில் உள்ளது. கோயிலில், ஆடிப்பூர 10நாள் உற்சவ வைபோக விழா தொடங்கியது.
ஆடிமாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் துளசி மாடத்தில் ஸ்ரீஆண்டாள் அவதரித்ததார். அதனையொட்டி ,வைணவ தலங்களில் திருவாடிப்பூர உற்சவம் என்ற பெயரில்10விழா நடந்து வருகிறது. அதன்படி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பான அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாலை ஆண்டாள் சிறப்பு வெள்ளிக்கேடயத்திலும் ஸ்ரீதேவிபூதேவி பத்தோசிதப்பெருமாள் தங்க கேடயத்திலும் சிறப்பு அலங்காரங்களில் எழுதிருளி பக்தர்களுக்கு காட்சித்தந்து அருள்பாலித்தனர் .
அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று விண்ணதிர முழங்கி பரவசத்துடன் வழிபட்டனர். ஆண்டாள் கோயில் பிரகாரத்தை மங்கள வாத்தியங்களுடன் வலம் வந்தார். பத்தோசிதப்பெருமாள்-ஆண்டாள் நாச்சியார் மாலை மாற்றும் நிகழச்சிக்குப்பின், ஊஞ்சல் சேவை நடந்தது.
நிகழ்ச்சியில் குறைந்த அளவில் பக்தர்கள் முக்க்கவசமணிந்து சமூக இடைைவெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu