லட்சுமி நரசிம்மர் கோயிலில் தை தெப்ப உற்சவ விழா

லட்சுமி நரசிம்மர் கோயிலில் தை தெப்ப உற்சவ விழா
X

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது.

108 திவ்விய தேசங்களில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலும் ஒன்று. இக்கோயிலில் தைத் தெப்ப உற்சவ விழா வருடா வருடம் நடப்பது வழக்கம். அது போல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று (24ம்தேதி) முதல் 26ம்தேதி வரை மூன்று நாட்கள் தெப்ப உற்சவ விழா தக்கான்குளத்தில் நடக்கிறது.அதையொட்டி பக்தோசிதபெருமாள் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் திருவிழா நாட்களில் மாலை 6 மணிக்கு ஊர்கோயிலில் இருந்து புறப்பட்டு கருமாரியம்மன் கோயில் வழியாக தக்கான் குளக்கரையை வந்து 7 மணிக்கு தெப்பத்தில் 24ம் தேதி மூன்று முறையும், 25ம்தேதி 5 முறையும், 26ம்தேதி 7 முறையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

முதல் நாளான நேற்று பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்கோயிலில் இருந்து புறப்பட்டு தக்கான்குளம் வந்து அங்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சோளிங்கர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பக்தோசித பெருமாள் சுவாமியை வழிபட்டனர்.

Tags

Next Story