ரத்தினகிரி அருகேமணல் மூட்டை கடத்திய இளைஞர்கள் 2 பேர் கைது

ரத்தினகிரி அருகேமணல் மூட்டை கடத்திய இளைஞர்கள் 2 பேர் கைது
X

ரத்தினகிரி அருகே உள்ள கீழ் மின்னல் பாலாற்றிலிருந்து  மணல் மூட்டைகளைக் கடத்த பயன்படுத்தப்பட்ட சுமோ

ரத்தினகிரி அருகே உள்ள கீழ் மின்னல் பாலாற்றிலிருந்து சுமோவில் மணல் மூட்டைகளைக் கடத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி போலீசார் கீழ் மின்னல் பாலாற்றில் உள்ள சுடுகாடு வழியாக ரோந்து சென்றனர்.

அப்போது பதிவு எண் இல்லாத டாடா சுமோ எதிரே வந்தது. அதைக் கண்ட போலீசார் சந்தேகம் அடைந்து சுமோவை நிறுத்தி அதிலிருந்த இருவரிடமும் விசாரித்தனர்.

அதில் மாங்குப்பம் பாடசாலை தெருவைச் சேர்ந்த அஜித், மற்றும் கீழ் மின்னலைச் சேர்ந்த பாண்டுரங்கன்ஆகிய இருவரும் சேர்ந்து அங்குள்ள பாலாற்றிலிருந்து சுமோவில் மணல் மூட்டைகளை வைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது.

உடனே. ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்., பாண்டு இருவரையும் கைது செய்து சுமோவையும் அதிலிருந்த 15மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!